For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீரில் மர்மநபர்களால் சுடப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் பலி.. முதல்வர் கண்டனம்
காஷ்மீரில் மர்மநபர்களால் சுடப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video
ஜம்மு - காஷ்மீர் பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி கொலை- வீடியோ
ஸ்ரீநகர் காஷ்மீரில் மர்மநபர்களால் சுடப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் புகாரி என்பவர் ரைஸிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார் புகாரி. அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகாரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Comments
English summary
A chief editor of a rising Kashmir magazine is shot and killed by Strangers.