அட கொடுமையே... ஒரே பொண்ண காதலிச்சுட்டு இந்த ஸ்கூல் பசங்க செய்த வேலைய பாருங்க!!
தெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர்.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த பள்ளி மாணவர்கள் 2 பேர் போதையில் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் இருந்து 190 கிமீ தொலைவில் உள்ளது ஜக்டியா நகர். இந்த ஊரில் உள்ள பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 10 ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து உள்ளனர். இதில் அந்த மாணவர்களுக்குள் தகராறு இருந்து வந்து உள்ளது.
தீ வைத்த மாணவர்கள்
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் 2 மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்தி கொண்டனர்.
ஒரு மாணவர் பலி
இதில் மஹேந்தர் என்ற மாணவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரவி தேஜா என்ற மாணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவருக்கு சம்பந்தம்
இதில் புதிய திருப்பமாக ஒரு மூன்றாவது மாணவனும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த மாணவரும் மாணவியை காதலித்தாரா? தனது காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டு மாணவர்களையும் தீ வைத்து கொளுத்தினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீர் பாட்டில்கள் பறிமுதல்
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் பீர் பாட்டில்கள் மற்றும் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளனர்.
கொலையா? தற்கொலையா?
இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக இரண்டு மாணவர்கள் தீயில் கருகி நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவரும் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு நிற்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.