பாம்புனா படம் எடுக்கும்.. பணம் கூடவா எடுக்கும்.. ஏடிஎம்முக்குள் புகுந்து கலங்கடித்த பா..பா.. பாம்பு!
காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாம்பு ஒன்று நுழைந்து பணம் எடுக்கும் இயந்திரத்தில் உட்கார்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதை பார்த்தாலே 10 அடி தூரம் ஓடுவோம். காரணம் அதன் விஷத்தன்மை. கொத்தினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இந்த நிலையில் கொரோனா நெருக்கடியில் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுப்பதே அதிகம். இதில் அந்த ஏடிஎம்மில் பாம்பு இருந்தால் என்ன செய்வது?
புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்..
ஓட்டையில்
ஆம் காசியாபாத்தில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு ஓட்டை வழியாக அந்த பாம்பு உள்ளே நுழைந்தது. பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் மானிடரின் மேல் இருந்த ஒரு ஓட்டையில் நுழைந்துவிட்டது.
வாடிக்கையாளர்கள்
இதை பார்த்த ஏடிஎம் வாடிக்கையாளர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கினர். அந்த வீடியோவில் அந்த பாம்பு உள்ளே சென்றுவிட்டது என வாடிக்கையாளர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. இதையடுத்து பாம்பு குறித்து வனத்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
அச்சம்
அவர்கள் வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர். அந்த பாம்பு விஷமற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் கமென்ட்டுகள் கிடைத்துள்ளன. மிகவும் அச்சமேற்படுத்துகிறது என பெரும்பாலனோர் தெரிவித்துள்ளனர்.
குரங்கு
இன்னும் சிலரோ பாம்புன்னா படம்தான் எடுக்குமா, அதுவும் பணம் எடுக்க வந்திருக்கணும், அப்பாவி ஜீவனை பார்த்து இப்படியா பயப்படுவது என சிலர் கிண்டலடித்து வருகிறார்கள். டெல்லியில் ஒரு ஏடிஎம் மையத்தில் ஒரு குரங்கு உள்ளே நுழைந்து அந்த மெஷினை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.