ஒரே இடத்தில் 2 முறை.. கடைசி நொடியில் தவிர்க்கப்பட்ட பெரிய விமான விபத்து.. கோவாவில் திக் திக் சம்பவம்
கோவா விமான நிலையத்தில் கடைசி நொடியில் விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனாஜி: கோவா விமான நிலையத்தில் கடைசி நொடியில் விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குஜராத்தின் சூரத்தில் இருந்து கோவா நோக்கி வந்து இருக்கிறது அந்த ஸ்பைஸ் ஜெட் விமானம். கோவா விமான நிலையத்தில் செவ்வாய் கிழமை காலை இறங்க தயாராகும் வரை எல்லாம் சரியாக இருந்துள்ளது.
ஆனால் சரியாக விமான நிலையத்தில் இறங்கும் போதுதான், அந்த விமானத்தின் முன் பக்க லேண்டிங் டயர்கள் செயல்படாமல் போய் உள்ளது. அதாவது முன் பக்க லேண்டிங் டயர்கள் வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது.
3 லட்சம் டீல்.. பொதுப்பணித்துறை பொறியாளக்கு கூலிப்படை மூலம் ஸ்கெட்ச்.. சிசிடிவி மூலம் அம்பலம்!
ஆனால் என்ன
ஆனால் அந்த விமானத்தின் விமானிகள் இதை கவனிக்காமல் விமானத்தை கீழே இறக்க முயன்று இருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்த ஓடுதள கண்காணிப்பாளர் ரமேஷ் டிக்கா, இந்த பிரச்சனையை கவனித்தார். இதனால் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.
துரிதம்
விமான கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் சென்றதும் துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள். மிக வேகமாக செயல்பட்டு விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதையடுத்து விமானி, விமானத்தை திருப்பிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே சென்றுள்ளார். பின் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளார்.
மீண்டும் என்ன
இந்த முறை, விமானத்தின் லேண்டர் டயர்கள் பாதி மட்டும் வெளியே வந்துள்ளது. முழுதாக வெளியே வராமல் டயர் பாதி மட்டும் வெளியே வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அந்த விமானிகளுக்கு வார்னிங் அளிக்கப்பட்டு , மீண்டும் விமானம் மேலே சென்றது.
மூன்றாவது முறை
அதன்பின் விமானம் மூன்றாவது முறையாக தரையிறங்க முயன்றது. அப்போதுதான் லேண்டிங் டயர்கள் மொத்தமாக இறங்கியது. அதன்பின் கடைசியாக மூன்றாவது முயற்சியில் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனால் நேற்று பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.