ஆந்திராவில் அம்பேத்கர் சிலை உடைப்பு...போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை!!
கிழக்கு கோதாவரி: ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் அம்பேத்கர் சிலையை சில விஷக் கிருமிகள் உடைத்து இருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கிழக்கு கோதாவரியில் ரசோல் மண்டலில் இருக்கும் கத்ரேணிபடு என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலையை சிலர் உடைத்துச் சென்றுள்ளனர். சிலையின் மூக்குப் பகுதி சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதற்கு முன்பும் நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்று சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிஷிகேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். இதேபோல் 2019 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுப்பதற்காக புதிய சிலை ஒன்று உடனடியாக நிறுவப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - மலையப்பசுவாமி வீதி உலா ரத்து