பெங்களூருக்கு புதிய மேயர் தேர்வு! விரைவில் பதவியேற்பு
பெங்களூரு மேயராக சம்பத் ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூர் மேயராக சம்பத் ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்ததேர்தலில் வாக்களிக்க 266 பேர் தகுதி பெற்றனர்.
மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பத் ராஜ் 139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் டிஜேஹள்ளி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர்.
சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மேயராக பதவியேற்க உள்ளார். துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை போல பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு ஒரே மேயர் என்ற நடைமுறை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை மேயரும், துணை மேயரும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாற்றப்படுவது வழக்கம்.