சந்தோசமாக திருமண நாள் கொண்டாடிய இரவில் மனைவி மர்ம மரணம்.. ஹைதராபாத்தில் விலகாத சோகம்
ஹைதராபத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற 28 வயது பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற 28 வயது பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். அவர் அப்பாட்மெண்டின் 4வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து மரணம் அடைந்து இருக்கிறார்.
இதுகுறித்து நாகலட்சுமியின் கணவர் எம். ரமேஷ் என்பவர்தான் புகார் அளித்து இருக்கிறார். தற்போது விசாரணை வட்டத்தில் அவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
திருமண நாள் கொண்டாட்டம்
ஹைதராபாத்தில் இருக்கும் மல்காஜ் கிரி என்ற பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவரும் தங்களது 8வது திருமண தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். நிறைய சொந்தங்களை அழைத்து சந்தோஷமாகவே கொண்டாடி உள்ளார்கள்.
இல்லை
ஆனால் இரவான பின்பும் நாகலட்சுமி மட்டும் தூங்காமல் போனில் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். காலை நான்கு மணிக்கு ரமேஷ் எழுந்து பார்க்கும் போது நாகலட்சுமி காணாமல் போய் இருக்கிறார். வீட்டு கதவும் வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருக்கிறது.
இறந்து கிடந்தார்
பின் பக்கத்து வீட்டு ஆட்களை அழைத்து கதவை திறக்க வைத்துள்ளார். வெளியே தேடி சென்ற போதுதான், நாகலட்சுமி தரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேரடியாக 4வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
என்ன ஆனது
இது கொலையா, தற்கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் தற்கொலை செய்யும் அளவிற்கும் நாகலட்சுமிக்கு பிரச்சனை இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.