For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்- பதுங்கி இருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பகுதியில் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

A terrorist killed by Security Forces in JK

இதனை முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் புல்வாமா மாவட்டம் கோஷி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம் அருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம்

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே தொடந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
One terrorist has been neutralised in the encounter in Jammu Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X