ஜெய்ப்பூரில்... மொட்டை மாடி முழுவதும்.. வெட்டுக்கிளிகள்.. சாரை சாரையாக.. பரபரக்கும் வீடியோ!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் ஒரு வீட்டு மாடியையே ஆக்கிரமித்துள்ள வெட்டுக்கிளிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பாலைவன வெட்டுக்கிளிகள் எனப்படும் லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளில் பயிர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என ஐநா அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் அதிகமாக சேதமடைந்துள்ளன.
லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக களம் இறங்கும் ஆளில்லா விமானங்கள்!
|
வெட்டுக்கிளிகள்
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சாரை சாரையாய் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்த காட்சி.
|
தானியங்கள்
பாலைவன வெட்டுக்கிளிகள் என்பவை 12 வெட்டுக்கிளி வகைகளில் ஒன்று. இவை ஒரே நாளில் பெருங்கூட்டமாக 130 கி.மீ. வரை கடக்கக் கூடியவை. தங்களின் எடை அளவுக்கு உணவு தானியங்களை உட்கொள்பவை.
*ஆர்கனோபாஸ்பேட்' பூச்சிக்கொல்லி மருந்தை பயிர்களின் மீது தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ளலாம்.
|
கொள்கை
திடீரென ஜெய்ப்பூரில் படையெடுத்த வெட்டுக்கிளிகள். 2.0" படத்தில் மொபைல் போன் மரத்தில் ஏறும் காட்சியையும் , காப்பான் படத்தின் காட்சிகளையும் நினைவுறுத்தும் நிஜ நிகழ்வு. மனிதனின் இலாப நோக்க கொள்கைகளுக்கு இயற்கை காட்டும்
|
வெட்டுக்கிளிகள்
பயிர்களுக்குப் பேரழிவு - 27 ஆண்டுகளில் இல்லாத தாக்குதல்- பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் நுழைந்து பயிர்களை மிக வேகமாக தாக்கி வருகின்றன.