கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும்.
அதையும் பார்த்துள்ளோம். ஆனால் கழுதைக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்துள்ளதை பார்த்துள்ளீர்களா, கழுதை மிகவும் சைலண்டாச்சே அது எப்படி வைலண்டா பாம்புடன் சண்டை போட்டதுனு பார்க்கிறீர்களா?
என்ன படிக்க ஆசை கண்ணா?.. 9 வயது சிறுவன் பிரகதீஷின் வித்தியாசமான பதிலை கேளுங்க!
ஆற்றங்கரை
ஆம்! ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் மாஹி ஆற்றங்கரையில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு புல்வெளியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த புற்களுக்கிடையே இருந்த பாம்பு, கழுதையின் வாயில் மாட்டிக் கொண்டது. கழுதையும் பாம்பை புல் என நினைத்து மேய்ந்துவிட்டது.
வெகுநேரம்
எதையோ விழுங்கிவிட்டதை அறிந்த கழுதை அங்கும் இங்கும் ஓடுகிறது. வெகு நேரமாக பாம்பு கழுதை வாயில் இருந்து வெளியேற முயற்சிக்கிறது. அது போல் கழுதையும் பாம்பை வாயிலிருந்து விட முயற்சித்தும் அது முடியவில்லை. பாம்பின் பாதி உடல் வெளியே தெரியும்படி இருக்கிறது. தலையை அசைத்து பார்க்கிறது.
உயிர் போராட்டம்
எனினும் பாம்பை வெளியேற்ற முடியவில்லை. இரண்டுமே வாழ்க்கை போராட்டத்தை நடத்தின. அப்போது வேறு வழியில்லாமல் கழுதை பாம்பை பல இடங்களில் கடிக்கிறது. அது போல் அந்த கழுதையின் வாயை பாம்பும் கடித்துவிடுகிறது. நீண்ட நேர உயிர் போராட்டத்திற்கு பிறகு இரண்டுமே பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.
வாக்கிங்
இந்த அரிய காட்சிகளை அவ்வழியாக வாக்கிங் சென்றவர் படம் பிடித்துள்ளார். கழுதைக்கும் பாம்புக்கும் இடையே உயிரை காக்க நடந்த போராட்டம் இப்படி பாதியிலேயே முடிந்துவிட்டது. இந்த வீடியோவும் புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாகின.