தலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு- வைரலாகும் ஒடிஷா வீடியோ
Recommended Video
கோர்தா: ஒடிஷாவில் விஜயதசமி நாளில் கோவில் ஒன்றில் பக்தர்கள் தலையை காலால் மிதித்து பூசாரி ஒருவர் ஆசீர்வாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஒடிஷாவின் கோர்தா மாவட்டம் பான்பூர் பகுதியில் கடந்த 8-ந் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை ஒட்டி அப்பகுதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
அங்கு கூடிய பக்தர்கள் வரிசையாக தரையில் குத்துகாலிட்டு அமர்ந்திருந்தனர். பின்னர் பூசாரி ஒருவர் வந்து ஒவ்வொருவர் தலையிலும் முதுகிலுமாக 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்தார்.
#WATCH A temple priest gives blessings to people by putting his foot on their heads on #VijayaDashami (8th October), in Banpur area of Khordha, #Odisha pic.twitter.com/1LxpnnfPqP
— ANI (@ANI) October 10, 2019
இந்த மிதியடி ஆசீர்வாதத்தில் சிறுவர்களும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.