ரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி.. மனதை உருக்கும் வீடியோ
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இன்டர்சிட்டி ரயில் மோதி படுகாயமடைந்த யானை ஒன்று நடக்க முடியாமல் தவழ்ந்து சென்ற காட்சி காண்போர் மனதை உருக வைத்தது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காலை 8 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது. அச்சமயம் யானை மீது ரயில் வேகமாக மோதியது. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது.
இதில் யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது.
பின்னர் ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர்.
"அபியும் நானும்".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்
விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2002-ஆம் ஆண்டு அலிபுக்தார் சந்திப்பை அகல ரயில் பாதையாக மாற்றியதை அடுத்து வேகமாக இயக்கப்பட்ட ரயில்களால் 65 யானைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.