உ.பியில் வீட்டிலிருந்த பெண் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம்.. வீடியோ வெளியிட்ட வெறியர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் இழுத்துச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் இழுத்துச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தினம் தோறும் செய்திகள் போட்டாலும், அரசு சட்டங்களை கடுமையாக்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும் இளைஞர்கள் அதனை வைத்து மிரட்டியே அந்த பெண்களை மேலும் மேலும் சீரழிப்பதை கேள்விபட்டிருக்கிறோம்.
பலாத்காரம் - வீடியோ
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த ஒரு இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் தைரியமாக உலாவ விட்டுள்ளனர் என்றால் அதனை என்னவென்று சொல்வது..
பெண்ணை இழுத்துச்சென்று
ஆம் உத்தரப்பிரதேசத்தில் திடீரென ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில் வீட்டில் இருக்கும் இளம்பெண் ஒருவரை இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கின்றனர். அதனை மற்றொரு இளைஞர் வீடியோ எடுக்கிறார்.
மிரட்டும் இளைஞர்கள்
அப்போது அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கையெடுத்து கும்பிட்டு கதறுகிறார். அவரை மிரட்டியபடியே அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் அந்த இளைஞர்கள் கெஞ்சும் அந்த பெண்ணை மிரட்டுகின்றனர்.
கண்ட இடங்களில் கை வைத்து
மேலும் அவ்வப்போது கண்ட இடங்களில் கைவைத்து பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்றனர். பின்னர் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.
எஸ்பி விசாரணை
இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் இந்த வீடியோ உன்னாவ் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உன்னாவ் பகுதி எஸ்பி தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புகார் அளிக்கவில்லை
யோவில் உள்ள நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து இதுவரை பாதிக்கப்பட்ட பெண்
உன்னாவ் சிறுமி - பலாத்காரம்
ஏற்கனவே உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறியிருந்தார். இதனை சிபிஐ அதிகாரிகளும் உறுதி செய்து எம்எல்ஏவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.