பிரச்சார வேனில் ஏறி ராகுல் காந்தி தோள் மீது கைபோட்டு செல்ஃபி எடுத்த இளம் பெண்.. குஜராத்தில் பரபரப்பு
செல்ஃபி எடுக்க ராகுலின் வாகனத்தில் ஏறிய பெண்.... அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள்...
அகமதாபாத் : ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின் போது அவரது வாகனத்தில் ஏறிய பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் உழைத்து வருகின்றன.
காங்கிரஸின் வெற்றிக்கான அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வியூகங்கள் வகுத்து அதன்படி செயல்படுத்தி வருகிறார். இதற்காக தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
திறந்தவெளி வாகனத்தில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, இளம் பெண் ஒருவர் திடீரென ராகுல் நின்றிந்த வேனில் ஏறினார். இதனால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
#WATCH: A girl gets onto Congress Vice President Rahul Gandhi's vehicle during his roadshow in #Gujarat's Bharuch, takes a selfie with him pic.twitter.com/blEnRXS2FK
— ANI (@ANI) November 1, 2017
ஆனால், அந்த இளம்பெண் தான் ராகுலின் தீவிர ரசிகை என்றும், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றும் கூறியதால், அவரை அனுமதிக்குமாறு ராகுல் காந்தி கூறினார். பின்னர் வேனில் நின்று அந்த இளம் பெண், ராகுல் காந்தி தோளில் கையை போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.