For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறவுக்கு மறுத்த தோழி.. ஷூ லேசால் கழுத்தை நெரித்து கொன்ற ஃபேஸ்புக் நண்பர்! மும்பையில் பயங்கரம்

மும்பையில் பாலியல் உறவுக்கு மறுத்த தோழியை ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உறவுக்கு மறுத்த தோழியை கழுத்து அறுத்த கொலை செய்த ஃபேஸ்புக் நண்பர்!- வீடியோ

    மும்பை: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை வாஷி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவருக்கு நளசோபரா பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் நிர்குடே என்ற 25 வயது இளைஞருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஹரிதாஸ் தனது அக்காவுடன் நளசோராவில் உள்ள ஃபிளாட்டில் வசித்து வந்துள்ளார்.

    அக்கா வெளியே சென்றபோது

    அக்கா வெளியே சென்றபோது

    இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் ஹரிதாஸ் அந்த இளம் பெண்ணை சந்திப்பதற்காக தனது ஃபிளாட்டிற்கு அழைத்துள்ளார்.

    பாலியல் உறவுக்காக..

    பாலியல் உறவுக்காக..

    இதனை நம்பி அந்த பெண்ணும் நளசோரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாலியல் உறவுக்காக அந்த பெண்ணை ஹரிதாஸ் நிர்குடே வற்புறுத்தியுள்ளார்.

    ஷூ லேசால் கொலை

    ஷூ லேசால் கொலை

    இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே தனது ஷூ லேசால் பெண்ணின் கழுத்தை நெரித்து ஹரிதாஸ் கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை தனது வீட்டிற்கு எதிரே உள்ள மாடி படியில் போட்டு சென்றுள்ளார்.

    மயக்கம் என நினைத்தனர்

    மயக்கம் என நினைத்தனர்

    இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த பெண் மயக்கத்தில் இருப்பதாக நினைத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் எந்த அசைவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    நிர்குடே வீட்டில் ரத்தக்கறை

    நிர்குடே வீட்டில் ரத்தக்கறை

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றினர். மேலும் நிர்குடே வீட்டில் ரத்தம் படிந்திருப்பதை கண்ட போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    படுக்கையிலும் ரத்தம்

    படுக்கையிலும் ரத்தம்

    இதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் நிர்குடே. அவரது வீட்டின் பெட்டிலும் ரத்தக்கறை படிந்திருந்ததால் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    மும்பையில் அதிர்ச்சி

    மும்பையில் அதிர்ச்சி

    அந்தப் பெண்ணின் பர்ஸ் மற்றும் செல்போன் நிர்குடேவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் காதலால் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A 20-year-old woman who had gone to meet her Facebook friend, a 25-year-old man from Nalasopara, was found dead on Sunday in the building. The man killed her with shoue lace for refusing sex.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X