ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் அல்கா லம்பா திடீர் சஸ்பென்ட்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அல்கா லம்பா அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து 2 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பிரீமியம் பேருந்து சேவை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், பிரீமியம் பேருந்து சேவை திட்டத்தில் எந்தவித ஊழலும் நடைபெறவவில்லை. சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர். அவ்வாறு ஊழல் நிரூபணம் ஆனால் நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் எனவும் ராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரான அல்கா லம்பா, டெல்லி முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலே ராய் பதவி விலகியதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அல்கா லம்பா, ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து 2 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி எம்ஏல்ஏ அல்கா லம்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நான் ஒழுக்கம் நிறைந்தவர் என்பதால் கட்சியின் முடிவை மதிக்கிறேன். நான் ஏதேனும் தெரியாமல் தவறு செய்திருந்தால், வருத்தம் தெரிவிக்க தயார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications