For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கூண்டோடு அதிரடியாக கலைப்பு- கேஜ்ரிவால் மீது பாய்ச்சல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி/மும்பை: மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கூண்டோடு அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில மூத்த தலைவர் மாயங்க் காந்தி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டு விட்டதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் இதற்கு அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மாயங்க் காந்தி உள்ளிட்டோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

AAP dissolves all units in Maharashtra

இது தொடர்பாக ட்விட்டரில் மாயங் காந்தி பதிவு செய்துள்ளதாவது:

அழகாக செயல்பட்டு வந்த மகாராஷ்டிரா பிரிவு கலைந்துவிட்டது. அந்த சாக்கடை அரசியல் வென்றது வருத்தம் அளிக்கிறது.

என்னை கட்சியில் இருந்து உயர்மட்டக்குழு வெளியேற்றட்டும். ஆனால் மகாராஷ்டிராவில் கட்சியின் வேரை முடிவுக்கு கொண்டு வர உயர்மட்டம் முடிவு செய்துவிட்டது. இது தான் உண்மை.

யாராவது மேலிடத்துக்குப் பொருந்தாத கருத்தை தெரிவித்தால், அவர் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார்.

இவ்வாறு மாயங்க் காந்தி கூறியிருக்கிறார்.

மேலும் மகாராஷ்டிரா ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
The Political Affairs Committee (PAC) of the Aam Aadmi Party (AAP) has decided to dissolve all bodies of the party's Maharashtra unit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X