தோத்தும் போயாச்சு, ரூ.1 கோடியையும் இழந்தாச்சு.. 'எளிய மக்கள் கட்சி'யின் நிலையைப் பாரீர்!!
டெல்லி: எளிய மக்கள் கட்சி என்று தமிழகத்தில் மொழியாக்கத்தின் மூலம் அழைக்கப்படும் ஆம் ஆத்மி கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ரூ 1 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
எளிய மக்களுக்கான கட்சி என்று வர்ணிக்கப்படும் ஆம் ஆத்மி கட்சி இந்த அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்த 1 கோடி ரூபாயும், அக்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் செலுத்தி டெபாசிட் தொகையாகும்.
எல்லோருமே டெபாசிட் இழந்ததால்தான் இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம்.
432 தொகுதிகளில்
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் 432 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பீதியைக் கிளப்பியது.
மோடி அலையில் அத்தனையும் காலி
ஆனால் வீசிய மோடி அலையில் அத்தனை பேரும் அடிபட்டுப் போய் விட்டார்கள். 4 பேர் மட்டுமே வென்றனர். அதுவும் பஞ்சாபில் மட்டுமே.
கெஜ்ரிவால் அவுட்
குறிப்பாக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்.
டெபாசிட் வகையில் ரூ. 1 கோடி காலி
இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். இந்த வகையில் மட்டும் இக்கட்சிக்கு ரூ 1 கோடி வரை டெபாசிட் திரும்ப வராமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.