For Daily Alerts
Just In
கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: ஆம் ஆத்மி கட்சியில் கலகக் குரல்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் ராகேஷ் அகர்வால் சாடியுள்ளார்.
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ராகேஷ் அகர்வால் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் உங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறீர்கள். உங்கள் பெயர், படத்தை தவிர வேறு எதனையும் டெல்லியில் பார்க்க முடியவில்லை.
அரசியல் அனுபவம் இல்லாத கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. இதனாலேயே வாக்கு வங்கி அரசியலுக்கு பலியாகிவிட்டது இந்த கட்சி என்று கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் ராகேஷ் அகர்வால் நடத்த இருந்த செய்தியாளர் சந்திப்பு அறைக்குள் நுழைந்து அமளியில் ஈடுபட்டனர்.
Comments
English summary
Aam Aadmi Party (AAP) senior leader Rakesh Agarwal was in for a rude shock when supporters of AAP leader Arvind Kejriwal stormed into his press conference on Tuesday.
Story first published: Tuesday, November 12, 2013, 16:23 [IST]