அபிநந்தனுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை.. இது அவசியம்.. விமானப்படை துணை மார்ஷல் தகவல்
அமிர்தசரஸ்: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் என்று ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்தார்.
கடுமையான இழுத்தடிப்புக்குப் பிறகு நான்கு மணி நேர தாமதத்தை செய்த பாகிஸ்தான், இரவு 9.20 மணிக்கு அபிநந்தனை வாகா எல்லை வழியாக இந்திய எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்தது.
இதன் பிறகு நிருபர்களை சந்தித்த, கபூர் மேலும் கூறுகையில், தற்போதுதான் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
Air Vice Marshal RGK Kapoor at Attari-Wagah border: Wing Commander #AbhinandanVarthaman has been handed over to us. He will now be taken for a detailed medical checkup because he had to eject from an aircraft. IAF is happy to have him back. pic.twitter.com/ZaaafjUQ90
— ANI (@ANI) March 1, 2019
விமானத்திலிருந்து குதித்து அவர் தப்பியுள்ளார். இவ்வாறான எமர்ஜென்சி தப்பித்தலில் ஈடுபடும் போது உடலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படும். எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஈடுபட்டு தப்பியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை என்பது அவசியமான ஒன்று என்றார்.
அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
கடைசி நேரத்தில் பரபரப்பு.. 4 மணி நேரம் இழுத்தடித்து அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்த பாக்.!