For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யு.ஆர். அனந்தமூர்த்தி மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பஜ்ரங் தள தொண்டர்கள்!

Google Oneindia Tamil News

மங்களூர்: பிரபல எழுத்தாளரும், ஞான பீட விருது பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தியின் மறைவை பட்டாசு வெடித்துக் கொண்டாடி அறுவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளனர் பஜ்ரங் தளத் தொண்டர்கள்.

வெள்ளிக்கிழமையன்று அனந்தமூர்த்தி மரணமடைந்தார். இதை கர்நாடக மாநிலம் மங்களூரில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது முகத்தை மூடிக் கொண்டு இவர்கள் இப்படிப்பட் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். மேலும் அனந்தமூர்த்திக்கு எதிராகவும் இவர்கள் கோஷமிட்டுள்ளனர்.

Activists of Fringe Hindu Groups Burst Crackers to 'Celebrate' Ananthamurthy's Death

உள்ளூர் பஜ்ரங் தளத் தலைவர் ஒருவரது வீடு முன்பு இந்தக் கொண்டாட்டத்தை இவர்கள் நடத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம், பாஜக ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் அனந்தமூர்த்தி. மேலும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு, மோடி பிரதமரானால் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் அவர் சபதமிட்டிருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் தனது நிலையிலிருந்து அவர் மாறினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொன்னது அது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் அனந்தமூர்த்தி மீதான துவேஷத்தை அவரது மரணத்தைக் கொண்டாடி பஜ்ரங் தளத் தொண்டர்கள் வெளிப்படுத்தியது நிச்சயம் அநாகரீகமானது.

English summary
Activists of fringe Hindu groups Friday "celebrated" the death of Jnanpith awardee U R Ananthamurthy by bursting crackers at a locality here. The activists, many of whom covered their faces to mask their identities, also raised slogans against Ananthamurthy as they burst the crackers, police said. The incident took place in front of the office of a local Bajrang Dal leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X