பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அவசியம்.. விவசாயிகளை நெருக்கும் மத்திய அரசு
விவசாயிகள் பயிர் காப்பீடு பெற, காப்பீடு செய்யும்போது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: பயிர் காப்பீடு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு சிரமத்தை உருவாக்கும்.
விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனில் அவர்களிடம் கண்டிப்பாக ஆதார் எண் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் திட்டம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் அவசியம் என வற்புறுத்தி வருகிறது.
மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறிய மத்திய அரசு, ஏழை மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதற்கும் ஆதார் அவசியம் என்று கூறியது சர்ச்சைக்குள்ளான போதும், மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை.
இந்நிலையில், நேற்று ஆதார் எண் கிடைக்க்கும் வரை பொதுமகக்ள் தங்களிடம் இருக்கும் வேறு அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என் நேற்று அறிவித்தது.ஆனால் இன்று, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அவசியம் என்றுகூறுகிறது. மேலும் எப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தகக்து.