அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டு பிரிவுகள் உருவானது. இதனால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. ஆனால். சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற பின், எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி என்று மூன்று அணிகள் உருவானது.
இந்த நிலையில் இணைந்த எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி இரண்டும் சேர்ந்து பொதுக்குழு கூட்டியது. அதன்படி சசிகலாவை கட்சியைவிட்டு தூக்கும் வகையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது.
அதற்கு பதிலாக முடிவெடுக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு முடிவிற்கு எதிராக திமுகவை சேர்ந்த கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடுத்தார். அதிமுக கட்சி மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணைய அதிமுக நிர்வாகிகளிடம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றுள்ளது.