For Daily Alerts
Just In
ராஜ்யசபா தலைவர் மைக்கை உடைக்க முயற்சி- அதிமுக மைத்ரேயனுக்கு கடும் கண்டனம்
ராஜ்யசபாவில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அதிமுக எம்.பி. மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆனால் இதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மைத்ரேயன், இன்று ராஜ்யசபாவில் எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று சில பேப்பர்களை கிழித்து எறிந்தார். அப்போது சபை தலைவர் இருக்கையில் துணைத் தலைவர் குரியன் அமர்ந்திருந்தார்.
அத்துடன் சபை தலைவர் இருக்கையில் இருந்த மைக்கை உடைக்கவும் முயற்சித்திருக்கிறார். மைத்ரேயனின் இந்த நடவடிக்கை ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மைத்ரேயனின் நடவடிக்கை சபை மரபுக்கு பொருந்தாத செயல் என்றும் குரியன் கண்டனம் தெரிவித்தார்.
Comments
English summary
Rajyasabha Deputy Chairman PJ Kurien has condemned ADMK MP Mythreyan for try to break chairman's mic.
Story first published: Monday, February 10, 2014, 13:15 [IST]