For Daily Alerts
Just In
குவாரி விற்பனை மோசடி.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானாவில் கைது
ஹைதராபாத்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது திருவிக நகர் எம்எல்ஏவாக இருந்தவர் வ. நீலகண்டன். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான இவர், கோடிக்கணக்கில் பணம் புரளும் குவாரி பிசினஸ்களை செய்து வந்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் தெலுங்கானா மாநிலத்திற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது, குவாரி விற்பனை மோசடி வழக்கு தொடர்பாக வாரங்கலில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகன் விக்னேஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது குவாரி மோசடி தொடர்பான வழக்குகள் இருந்த நிலையில், போலீசார் நீலகண்டனை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English summary
ADMK’s Ex-MLA V. Neelakandan was arrested with his son by police in Telangana.
Story first published: Sunday, March 12, 2017, 17:28 [IST]