இந்திய விமானப்படை நடத்திய 'ஆபரேசன் லெகர்': முதன்முறையாக புகைப்படம் வெளியீடு
ஹைதராபாத்: விசாகப்பட்டணத்தில் புயலுக்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் இந்திய விமானப்படை வியத்தகு சாதனையை செய்துள்ளது. ஆபரேசன் லெகர் என்று பெயரிட்டு நடத்திய மீட்பு பணிகளின்போது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை விமானப்படை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அதன் புல்லரிக்கும் காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்கு.
படகுகளா இவை?
விசாகபட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு புயலின்போது தூக்கி வீசப்பட்டுள்ள படகுகளை பார்க்கலாம். ஏதோ தீப்பெட்டியில் இருந்து சிதறிய தீக்குச்சிகளை போல படகுகள் காணப்படுகிறது.
கட்டப்படும்போதே போச்சா
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அரசு மனமிறங்கி கட்டிக்கொடுக்க ஆரம்பித்த பாலம் எப்படி பாதியிலேயே உடைந்து கிடக்கிறது பாருங்கள்.
மேகத்தின் ஊடே
மேகத்தை ஊடுருவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விசாகபட்டணம் நகரின் பீம் உனிப்பட்ணம் என்ற பகுதி செயற்கைக்கோள் படம் போல தெரிகிறது.
சுத்திகரிப்பு பிரிவு சுத்தமாக காலி
விசாகபட்டிணத்திலுள்ள எண்ணை சுத்திகரிப்பு பிரிவு மேற்கூரை பிய்த்து எறியப்பட்ட நிலையில், உள்ள காட்சி.
சோலார் பேனல், பணால்
விசாகபட்டணம் ஏர்போர்ட் சோலார் பேனல்களின் பரிதாப நிலையை இந்த படத்தில் பார்க்கலாம்.
யூரியா கிடங்கு
யூரியா சேமிப்பு கிடங்கு கேட்க நாதியற்று கிடக்கும் காட்சியை இந்த படம் விளக்குகிறது.
வெள்ளத்தில் மிதக்கும் ஸ்ரீகாகுளம்
ஸ்ரீகாகுளம் மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் இந்த படத்தில் தெரிகிறது.