For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என நான் சொன்ன போது கேலி செய்தார்களே, இப்போது என்ன ஆச்சு என பார்த்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வரும் 30ம் தேதி ஆட்சியமைக்கிறது. இதில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக சாதனை படைத்துள்ளது.

After 6th phase polling, I say bjp win 300 plus, people mocked me. But, the results are for everyone to see: PM Modi

இதையடுத்து வாக்களித்த குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகஞாயிற்றுக்கிழமை மாலை அஹமதாபாத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மாநில அரசு பேரிடர் மேலாண்மை குறித்து தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளை குஜராத் முழுவதும் மேற்கொள்ள வேண்டும.

குஜராத்துல நீங்க முழக்கமிடுது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா குஜராத்துல நீங்க முழக்கமிடுது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா

குஜராத் மக்களின் தரிசனத்தை இங்கு கண்டுகொண்டு இருக்கிறேன். இந்த மக்களின் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு ஸ்பெசலான ஒன்று. என்னை வளர்த்த இடத்துக்கு வந்துள்ளேன். அதே பழைய மோடியாகவே இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என 6ம் கட்ட தேர்தலின் போது சொன்னேன். ஆனால் அப்போது என்னை மக்கள் கேலி செய்தார்கள். ஆனால் இப்போது என்ன ரிசல்ட் வந்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சராசரி குடிமகனின் பிரச்னையை தீர்க்க இந்த ஐந்து வருடத்தை பயன்படுத்தி கொள்வோம். உலக அரங்கில் இந்தியாவின் நிலையை இன்னும் அதிகரிக்க பாடுபடுவோம். அடுத்த 5 வருட ஆட்சி பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் ஆட்சியாக இருக்கப்போகிறது" இவ்வாறு கூறினார்.

முன்னதாக அமித் ஷா பேசுகையில், குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும் என்றும் எனவே மேற்குவங்கத்திற்கு கேட்குமாறு தொண்டர்களே முழக்கமிடுங்கள் என்றும் கூறினார்.

English summary
PM Modi said that After 6th phase of polling, I had said that it’s 300 plus for us. When I said it, people mocked me. But, the results are for everyone to see.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X