எதிர்த்து பேசிய மன்மோகன்.. கை குலுக்கிய மோடி.. எல்லாம் சரி.. பதில் சொல்லாம "எஸ்" ஆயிட்டிங்களே!
ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் கடுமையாக பேசிய மன்மோகன் சிங்கிடம் சிரித்து பேசி, கை குலுக்கினார் பிரதமர் மோடி,
டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக பேசினார். இதனை தொடர்ந்து உணவு இடைவேளையின் போது பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை பார்த்து, சிரித்து, கை குலுக்கி பேசிவிட்டு சென்றார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்ய சபா தொடங்கிய முதல் நாளில் இருந்தே, அவையில் ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய அவை எதிர்க்கட்சியின் அமளியால் 12 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இந்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். மன்மோகன் சிங் தனது உரையில் போது மத்திய அரசை மிகக் கடுமையாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி, மன்மோகன் சிங் நோக்கி வந்து கை குலுக்கினார். சிறிது நேரம் சிரித்து பேசிவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றார். அதே போன்று காங்கிரஸ் எம்பி குலாம் நபி அசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசிவிட்டுச் சென்றனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு பிரதமர் மோடி வருவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் அவையில் அவரின் பதிலுக்காக காத்திருந்த எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.
Prime Minister Narendra Modi walked over to Ex-PM Manmohan Singh and shook hands.
ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக பேசினார். இதனை தொடர்ந்து உணவு இடைவேளையின் போது பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை பார்த்து, சிரித்து, கை குலுக்கி பேசிவிட்டு சென்றார்.