For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிளியைத் தொடர்ந்து ஆட்டைக் கைது செய்து சிறையில் அடைத்த மகாராஷ்டிர போலீஸ்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருடனுடன் சேர்த்து ஆடு ஒன்றையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டி ஒருவரை ஆபாசமாக பேசியதாக கிளி ஒன்றிற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும் படி மகாராஷ்டிர போலீசார் சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

After parrot, now a goat locked in jail

இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, ஆடு ஒன்றைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் அம்மாநில போலீசார்.

கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கால்நடை திருடனுடன் சேர்த்து போலீசார் ஆட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த சனிகிழமை ஆடு ஒன்று திருடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காணாமல் போன ஆட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், திருடனுடன் சேர்த்து ஆட்டையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை போலீஸார் ரொம்ப ஸ்டிரிக்ட்டாக கடைப்பிடிக்கிறார்கள் போல!

English summary
The shocking incident took place at Parbhani district in Maharashtra. Contradictory to the parrot story, the goat did not even commit any 'crime'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X