மிஸ்டர் மினிஸ்டர், உங்க எருமை மாடுகளைத் திருடியவன் சிக்கிட்டான்.. மாடுகளும் பத்திரம்!
ராம்பூர்: உ.பி. அமைச்சர் அஸம் கானின் காணாமல் போன எருமை மாடுகள் சிக்கியுள்ளன. அதேபோல அவற்றைத் திருடிச் சென்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி. மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அஸம்கான். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவரது 7 எருமை மாடுகள் ராம்பூரில் உள்ள அவரது பண்ணையிலிருந்து காணாமல் போயின. அவற்றின் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிட்டி கிரைம் பிராஞ்ச் போலீஸார் தனிப்படை அமைத்து எருமை மாடுகளையும், அதைத் திருடியவர்களையும் தேடி வந்தனர்.
மோப்பா நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் திருடர்கள் சிக்கியதாக தெரியவில்லை. எருமை மாடுகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அனைத்து மாடுகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் சுனான் என்ற திருடனைப் போலீஸார் மொராதாபாத் மாவட்டத்தில் வைத்துக் கைது செய்தனர். அவனிடமிருந்து கிடைத்த தகவலை வைத்து எருமை மாடுகளை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். மற்றவர்களும் கைனார்கள்.
இருப்பினும் 2 பேர் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.