For Quick Alerts
For Daily Alerts
Just In
அப்சல் குருவுக்கு தூக்கு.. இன்று ஓராண்டு.. பாதுகாப்பு வளையத்தில் காஷ்மீர்
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் காஷ்மீரில் செல்போன், இணையதள சேவைகளும் இன்று முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளன.
Comments
English summary
Afzal Guru's first death remembrance was observed in Kashmir today.
Story first published: Sunday, February 9, 2014, 14:57 [IST]