For Daily Alerts
Just In
தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது: நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார்
தனியார் துறையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.
டெல்லி: தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கவே கூடாது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் குமார் கூறியதாவது:
தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது; அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் பல தடைகள் ஏற்படும்.
இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பும் குறையும்.
இவ்வாறு ராஜீவ் குமார் கூறினார்.
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தினர்.
Comments
English summary
Niti Aayog vice chairman Rajiv Kumar has said he is against extending the reservation policy to the private sector.
Story first published: Thursday, October 19, 2017, 9:55 [IST]