அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா!
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Recommended Video
புவனேஷ்வர்: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்தில் இருந்து காலை 9.53 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது.
5000 கிமீ தூரம்
அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இன்று அதன் உச்சபட்ச தெலைவான 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
4 முறை சோதனை
கடைசியாக அக்னி 5 ஏவுகணை கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது. அக்னி ஏவுகணை இதற்கு முன்பு 4 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.
50 டன் எடை
4 சோதனைகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அக்னி- 5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டுள்ளது.
5 அக்னி ஏவுகணைகள்
தற்போது வரை இந்தியாவிடம் 5 அக்னி ஏவுகணைகள் உள்ளன. அதாவது அக்னி-1 ஏவுகணை 700 கிமீ தூரம் சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
அக்னி ஏவுகணைகள் சோதனை
அக்னி-2 ஏவுகணை 2000 கிமீ தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதேபோல் அக்னி-3 ஏவுகணை 2500 கிமீ தொலைவும் அக்னி-4 ஏவுகணை 3500 கிமீ தொலைவும், அக்னி-5 ஏவுகணை 5000 கிமீ தொலைவும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.