For Daily Alerts
Just In
வேளாண் அமைச்சகம் இனி வேளாண், விவசாயிகள் நலத்துறையாக மாற்றம்: பிரதமர் மோடி
டெல்லி: மத்திய வேளாண்துறை அமைச்சகம் இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகமாக இயங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எட்டிய சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி விவரித்தார்.
மேலும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண்துறை அமைச்சகம் என்பது இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகமாக செயல்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
விவசாயிகளின் நலனைக் காக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments
English summary
Prime Minister Modi has announced that Agri Ministry to be renamed Ministry of Agriculture & Farmer Welfare for institutionalized care of farmers.