அகமதாபாத்தில் போராட்டக்காரர்களால் சரமாரி கல்வீச்சுக்குள்ளான போலீசார்- வைரல் வீடியோ
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள், போலீசாரை சரமாரியாக கல்வீசித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பெரும் வன்முறையாக வெடித்த லக்னோ போராட்டம்- ஒருவர் பலி- போலீஸ் விசாரணை
இந்த ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. கர்நாடகாவின் மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்..
#WATCH Gujarat: Protesters pelt policemen with stones during demonstration against #CitizenshipAmendmentAct, in Ahmedabad. (Earlier visuals) pic.twitter.com/BAqk7LIWb9
— ANI (@ANI) December 19, 2019
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்திலும் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
இதில் 2 போலீசார் போராட்டகாரரர்களின் சரமாரி கல்வீச்சுக்குள்ளாகினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.