மேஜர் முகுந்த் உடலை சுமந்து வந்த விமானியின் மனதை உருக்கும் கடிதம்…
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணமடைந்தார்.
அவரது உடல் பெசண்ட் நகரில் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்த விமானி முகுந்தின் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முகுந்தின் உடலை சுமந்து வந்த ஏர் இண்டியா விமானத்தை ஓட்டி வந்த கேப்டன் எஸ். சீனிவாசன் என்ற அந்த விமானி எழுதிய கடிதத்தில்,
"பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு... உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடையவைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த வலிமையும் தருவார் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் " என்று உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.