எதிர்ப்பு எதிரொலி.. ஏர் - இந்தியாவை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது
ஏர் - இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.
Recommended Video
டெல்லி: ஏர் - இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இந்த விமான நிறுவனம் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் மத்திய அரசு கடந்த ஆண்டு இந்த விமான நிறுவனம் மோசமான இழப்பை சந்தித்ததாக கூறியது.
ஏர் - இந்தியா நிறுவனம், 56 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியதாக் கூறப்பட்டது. இதனால் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. மக்கள் தரப்பில் பெரிய எதிர்ப்பு நிலவியது.
ஏல முறையில் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில் மத்திய அரசு மேலும் இதில் முதலீடு செய்ய உள்ளது. நஷ்டத்தை போக்கும் வகையில் நிறைய முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டு இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இதில் ஏர் - இந்தியா நிறுவனத்தை விற்கும் முடிவை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.