வக்கீல் உடையில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்!
மும்பை: ஐஸ்வர்யா ராய் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அந்த படத்தின் புகைப்படத்தில் அவர் வழக்கறிஞர் உடையில் அழகாக உள்ளார்.
பாலிவுட், கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பிறகு நடிக்காமல் இருந்தார். மகள் ஆராத்யாவுடன் நேரம் செலவிட வேண்டும் என அவர் நடிக்காமல் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது ஆராத்யாவுக்கு 4 வயதாகப் போவதால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஐஸ்வர்யா.
நல்ல கதையாக தேடி வந்த அவருக்கு சஞ்சய் குப்தா கூறிய ஜஸ்பா கதை தான் பிடித்திருந்தது.
ஜஸ்பா
தென் கொரிய படமான செவன் டேஸின் இந்தி ரீமேக் தான் ஜஸ்பா. படத்தில் ஐஸ்வர்யா ராய் வழக்கறிஞராக வருகிறார். இர்பான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் அனுபம் கேர், சபானா ஆஸ்மியும் உள்ளனர்.
அழகு
ஜஸ்பா படத்தில் ஐஸ்வர்யா வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு கவுன் அணிந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக உள்ளார்.
மும்பை
மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஜஸ்பா படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
விளம்பரம்
ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்தபோது விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். தற்போது படத்தோடு சேர்த்து விளம்பர படங்களிலும் நடிக்கிறார். அவர் விளம்பரப் படத்தில் நடிக்க கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.