For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது.

Google Oneindia Tamil News

கான்பூர்: அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்து 2 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

Ajmer-Saeldah express derailed in Kanpur

இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 26 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் கான்பூர் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியாகினர்.

கடந்த 17 ஆண்டுகளில் நடந்த மோசமான ரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
14 bogies of Ajmer- Saeldah express derailed near Rura in Kanpur in the wee hours of wednesday. Many passengers are reportedly injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X