கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி
அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது.
கான்பூர்: அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்து 2 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 26 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் கான்பூர் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
#WATCH 14 coaches of Train no 12988 #AjmerSaeldah express derail near Roora (Kanpur, Uttar Pradesh). Several injured. pic.twitter.com/s3VRDUavlu
— ANI UP (@ANINewsUP) December 28, 2016
மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியாகினர்.
கடந்த 17 ஆண்டுகளில் நடந்த மோசமான ரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.