For Daily Alerts
Just In
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி : உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
லக்னோ: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் வட தமிழகம் சிக்கித் தவிக்கிறது. சென்னை பெருநகரம் மழைவெள்ளத்தால் மூழ்கிப் போய் மீண்டிருக்கிறது.
#ChennaiRainsHelp https://t.co/wfLNfFhR7o
— CM Office, GoUP (@CMOfficeUP) December 7, 2015
கடலூர் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இந்த துயரத்தில் பங்கேற்கும் வகையில் கர்நாடகா, பீகார், ஒடிஷா மாநிலங்கள் தலா ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழகத்துக்கு ரூ25 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிற மாநிலங்களை விட உத்தரப்பிரதேச மாநில அரசு 5 மடங்கு நிதி உதவி தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
UP CM Akhilesh Yadav has announced Rs 25 crores fund for Chennai Floods relief operations.
Story first published: Monday, December 7, 2015, 17:40 [IST]