கிரிக்கெட் போதும்.. கபடியை கொஞ்சம் பாருங்க.. பாலிவுட் நடிகர் வேண்டுகோள்
மும்பை: இந்தியர்கள் கபடி போட்டி உலக கோப்பையை தவறாமல் பார்க்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விரும்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக கோப்பை கபடி லீக் போட்டித்தொடர் வரும், ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. இதுகுறித்து ட்விட்டரில் அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது:
நான் ஒரு விளையாட்டு விரும்பி. கிரிக்கெட், ஹாக்கி, கபடி என எதுவாக இருந்தாலும் எனக்கு பிடிக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும், விளையாட்டுக்கும் எப்போதும் எனது ஆதரவு உண்டு. கிரிக்கெட்டை பொறுத்தளவில் அது உலக பிரசித்தி பெற்ற விளையாட்டாக உள்ளது.
எனவே, நமது நாட்டில் இருந்து தோன்றிய கபடிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள கபடி லீக் போட்டியை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு ட்விட்டரில் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.