கொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் கைது
கொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தாவை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா: கொல்கத்தா ரயில் நிலையத்தில் அல் கொய்தாவை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்த லேப்டாப், பெண் டிரைவ் போன்ற மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டது
கொல்கத்தா ரயில் நிலையத்தில் இன்று சிறப்பு பாதுகாப்பு படை திடீர் என்று சோதனையில் ஈடுபட்டது. உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடந்தது.
பாதுகாப்பு படை சந்தேகப்படும் படி இருந்த நபர்களிடம் தீவிரமாக சோதனை செய்தது. அப்போது கொல்கத்தா ரயில் நிலையத்தின் இரண்டாவது கேட் அருகில் இரண்டு பேரை அவர்கள் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் அல் கொய்தாவை சேர்ந்த தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. அவர்களிடம் வெடி குண்டு வைப்பது குறித்த திட்டங்கள் அடங்கிய லேப் டாப்கள் இருந்திருக்கின்றன.
மேலும் அவர்களில் ஒரு தீவிரவாதி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் இன்னொரு தீவிரவாதி பாஷிர்ஹாட் என்ற மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.