யோகா மூலம், சர்க்கரை நோய் கட்டுப்பாடு.. மோடி ஐடியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம், மாதம் ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில், வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இன்று 19வது வார நிகழ்ச்சியில் மோடி பேசினார்.
பிரதமர் கூறியதாவது: இவ்வாண்டு சிறந்த மழை பெய்யும் என்று வானிலை துறை அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் பார்க்கலாம்.
சர்வதேச யோகா தினம் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிக இடங்களில் ஒரே நேரத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. யோகா மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பாக தங்களது அனுபவங்களை, மக்கள் தெரிவிக்க வேண்டும்.
யோகா பயிற்சி மையங்கள் ஓராண்டு காலம் தொடர்ச்சியாக இதுதொடர்பான முயற்சியை எடுக்க வேண்டும். விமானப்படையில் பெண்கள் முதல்முறையாக, பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்ரோ, மூலம் செயற்கைக்கோள்களை ஏவியது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் பெருமை தருகிறது.