விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்.. டிராய் பரிந்துரை
விமான பயணத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்து இருக்கிறது.
டெல்லி: விமான பயணத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்து இருக்கிறது.
தற்போது விமானத்தில் செல்லும் போது செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும் விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் குழம்பிப் போக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் பெரிய விபத்துக்கள் கூட நேர வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும்.
இதன் காரணமாக விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. விமான போக்குவரத்து துறைக்கு டிராய் எழுதிய கடிதத்தில் இந்த பரிந்துரையை செய்துள்ளது.
அதே போல் விமானத்தில் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. இதன் மீது விமான போக்குவரத்து துறை சில நாட்களில் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம். இந்த சிக்னல்கள் விமான சிக்னல்களை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்படும்.