குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா?
குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
Recommended Video
அஹமதாபாத்: குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்த எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி உடனே பதில் அனுப்பி உள்ளார்.
அல்பேஷ் தாக்குர் மூலம் இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவரம் குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அல்பேஷ் தாக்குர் ராகுலுக்கு ''நாம் வென்று விட்டோம்'' என்று எஸ்எம்எஸ் செய்து இருக்கிறார். இதற்கு ராகுல் மிகவும் அழகாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அல்பேஷ் தாக்குர்
குஜராத் தேர்தலில் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்படும் காங்கிரஸின் அல்பேஷ் தாக்குர் ரந்தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் 85,777 வாக்குகள் பெற்றார்.
குஜராத் மாநில தலைவரா?
குஜராத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அல்பேஷ் தாக்குர் பார்க்கப்படுகிறார். மேலும் இவருக்கான வாக்கு வங்கி மிகவும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் மேலிடத்திடம் இவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அல்பேஷ் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ராகுலுக்கு எஸ்எம்எஸ்
குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் இன்று அல்பேஷ் தாக்குர் ராகுல் காந்திக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த எஸ்எம்எஸ்ல் ''நாம் வென்றுவிட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி, குஜராத் மக்களுக்கு தேர்தலில் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் அனுப்பிய பதில்
தற்போது அல்பேஷ் தாக்கூரின் எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி பதில் அனுப்பி உள்ளார். அதில் ''ஆம் சகோதரா. காங்கிரஸ் வென்றுவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த எஸ்எம்எஸ் குறித்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே நேர்மறை எண்ணங்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.