For Daily Alerts
Just In
உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு.. மீரட்டில் தலித்துகள் போராட்டம்
உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மீரட்டில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
கொல்கத்தாவில் மேலும் ஒரு சிலை உடைப்பு..மோடியின் முடிவு- வீடியோ
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மீரட்டில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் உடைத்தெறிந்தது. இதனால் அங்கு பெரும் போராட்டம் வெடித்தது.
இதைத்தொடர்த்து தமிழகத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் இந்த சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தலித் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு புதிய சிலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Comments
English summary
Ambedkar statue has broken in UP by strangers. Dalits protesting against this in meerut.
Story first published: Wednesday, March 7, 2018, 15:17 [IST]