பெங்களூரில் பல இடங்களில் திடீர் மழை.. மக்கள் கொண்டாட்டம்
கோடை காலம் தொடங்கி பல நாட்கள் ஆன பின்பும் கூட பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் என்று பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது தென்னிந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.
அதே சமயத்தில் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. ஆனால் தற்போது கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஏப்ரலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்ற மாதமே வாரங்களுக்கு முன்பே வானிலை மையம் கூறி இருந்தது.
அந்த வகையில் கடந்த 2 நாட்கள் பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் தேர்தல் சமயத்தில் பெங்களுரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று தேர்தலின் போது ஹுப்ளி தொகுதியில் மட்டுமே மழை பெய்தது. ஆனால் இதனால் வாக்கெடுப்பு பெரிய அளவில் தடைபடவில்லை.
தற்போது பெங்களூரில் மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது. சாந்தி நகர், ஜெயாநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி, இந்திரா நகர், எம்ஜி ரோட் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.