பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்ட வருண்காந்தி!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து வருண்காந்தி கழற்றிவிடப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் எதியூரப்பா, பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாகி உள்ளனர்.
தமிழகத்தின் ஹெச். ராஜா 14 தேசிய செயலாளர்களில் ஒருவராகவும் லலிதா குமாரங்கலம் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலராக இருந்த வருண்காந்தி நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வந்த ராம் மாதவ் பொதுச்செயலாளராக நியமினம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி, தன் மகன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வரானால் மாநிலம் செழிப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதை பாஜக மேலிடம் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதனாலேயே வருண் காந்தி ஓரம்கட்டப்பட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.