For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தலைவர், பிரதமருக்கு இணையாக அமித்ஷா அந்தஸ்தை உயர்த்திய மத்திய அரசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷாவுக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு- வீடியோ

    டெல்லி: பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு, பிரதமர் மோடிக்கு நிகராக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாஜக தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும், உள்ள அமித் ஷா, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 2014ம் ஆண்டு முதல், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Amit Shah gets Modi-like security cover

    இருப்பினும், தற்போது பிரதமருக்கு இணையான பாதுகாப்பு அமித்ஷாவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் நாடு முழுக்க அமித்ஷா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன்படி இசட் பிளஸ் பாதுகாப்புடன் ASL எனப்படும் நவீன பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்படும். அமித்ஷா தவிர குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஏஎஸ்எல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    English summary
    As he travels around the country for 2019 Lok Sabha elections, Z+ security may not be enough for Amit Shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X